Saturday, 11 July 2015

சுகப்பிரசவம் ஆக வேண்டுமா?..

    ர்ப்பத்தின் ஆரம்ப காலத்தில் இருந்தே சில உணவு முறைகளை கடை பிடிச்சா தாய் சேய் நலமா இருக்குற தோட சுகப் பிரசவத்துக்கும் வழி வகுக்கும்.

1, கர்ப்பத்தின் ஆரம்ப மாதங்களில் வாய்வு  அதிகம் உள்ள பொருள்களான வாழைக்காய், உருளைக் கிழங்கு, இறால், மீனெல்லாம் சாப்பிடக் கூடாது.

2. கர்ப்பமான நாள் முதல் பிரசவம் ஆகுற வரைக்கும் முருங்கை இலை, சின்ன வெங்காயம், சீரகம் எல்லாவற்றையும் சேர்த்து சூப்பு வைத்து சாப்பிட்டு வந்தால் சுகப்பிரசவம் ஆகும்.

3. மூன்றாவது மாதம் முதல் பிரசவம் ஆகுற வரைக்கும் வெந்தயக் கஞ்சி சாப்பிடுறது சுகப் பிரசவத்திற்கு வழி வகுக்கும். வெந்தயம் ஒரு ஸ்பூன் அரிசி ரெண்டு ஸ்பூன் உடைத்து போட்டு கஞ்சியாக காய்ச்சி பால் சேர்த்து மூன்று நாளிற்கு ஒரு முறை சாப்பிடலாம்.

4. ஐந்தாவது மாசத்தில் இருந்து எலுமிச்சை அளவு வெண்ணையை ஒரு டம்ப்ளரில் கொதி நீரில் கலந்து காலை அல்லது மதிய வேலையில் சாப்பிடலாம்.

5. 7 வது மாதத்திற்குப்  பிறகு வடகத்தை பொறித்து அதில் ஒரு டம்பளர் தண்ணீர் விட்டு கொதிக்க வைத்து அரை டம்பளர் ஆனதும் குடிக்கலாம். இதை வாரத்தில் இரண்டு முறை செய்யவும். 

நம்மால்  முடியும் என்ற மன வலிமையை வளர்துக்கிட்டால் சுகப்பிரசவம் சாத்தியம் தான்.

Tuesday, 7 July 2015


எச்சரிக்கை...சி.எப்.எல் (CFL) பல்புகள்


 ல்புகள் கை தவறி விழுந்து விட்டால் உடனே அந்த இடத்தை விட்டு வெளியேறி விட வேண்டும் என்று பிரிட்டிஷ் சுகாதார துறை எச்சரித்து உள்ளது. 


ஏன் என்றால் இந்த மெர்குரி திரவம் ஆர்செனிக், துத்த நாகத்தை விட அதிக விஷ தன்மை உடையது.
 இந்த விஷத்தை நுகர்ந்தாலோ அல்லது சர்மத்தில் பட்டாலோ தலைவலி, மூளை பாதிப்பு, உடல் அசைவுகள் பாதிகப்பட்டு நிலை தடுமாற்றம் ஏற்படுமாம். அலர்ஜி பிரச்சனை உள்ளவர்களுக்கு சர்ம பாதிப்புகளும் ஏற்படுமாம்.

சி.எல்.எப் பல்புகள் உடைந்து விட்டால் என்ன செய்ய வேண்டும் ? 

--> உடனே அந்த அறையில் இருந்து வெளி ஏறி விட வேண்டும். அந்த நெடி மூக்கில் ஏறக்கூடாது. பதினைந்து நிமிடங்கள் ஆனப்பின் அப்புறப் படுத்தலாம்.

--> கண்ணாடி துகள்கள் காலில் படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

--> வேக்கும் க்ளீனரால் சுத்தப்படுத்தக் கூடாது. வேக்கும் உறிஞ்சப் பட்டால், அது உள்ளே ஒட்டிக் கொள்ளும். அதை திரும்ப உபயோகிக்கும் போது மெர்குரி துகள்கள் மற்ற அறைகளுக்கும் பரவி மிக மோசமான உடல் உபாதைகளை ஏற்ப்படுத்தும்.


--> கைகளில் ரப்பர் க்லவ்ஸ் போட்டுக் கொண்டு சாதாரண துடைப்பத்தால் சுத்தப் படுத்தலாம்.

--> உடைந்த துகள்கள் மற்றும் திரவத்தை ஒரு பிளாஸ்டிக் பையில் சேகரித்து குப்பைத் தொட்டியில் போடவும்.


                                
முடிந்த வரை இதை நண்பர்களிடம் பகிரவும் ..

Sunday, 5 July 2015

உணவே விஷம் உஷார் !!

ந்த அவசர உலகத்துல பொண்டாட்டி புள்ளைங்க கீழ விழுந்தா தூக்கி விட கூட நேரம் இல்லாம ஏறி மிதிச்சுட்டு ஓடுற நிலைமை தான் மனுஷனுக்கு. ஆமாங்க! 

ஓட்டமும் வேகமும் தான் வாழ்க்கையா ஆயிடுச்சு !
அதனால, நம்ம வயிறோ கண்டதையும் அள்ளி கொட்டுற குப்பை தொட்டியா மாறிடுச்சு !

சமைக்கவோ சாப்பிடவோ நமக்கு நேரமே கிடையாது. கடைல விக்கிற பாக்கெட் உணவுகளை வாங்கி சாப்பிடுறதுதான் பேஷனாப் போச்சு.

                                                     
                                                                                                             ரெடிமேட் சப்பாத்தி ....
                                         ரெடிமேட் பரோட்டா ....
                                     ரெடிமேட் இடியாப்பம் ..... 

இப்படியே போனா ரெடிமேட்ல நோயும் வீடு தேடி வந்துரும் பிட்சா டெலிவரி மாதிரி. 




பொதுவாகவே ரெடிமேட் உணவுகளில் ருசியை கூட்டுவதற்காக மோனோசோடியமும், கலருக்காக சில கெமிக்கல்சும் சேர்க்கப்படுகிறது. ஆப்பிள்ள கூட மெழுகு சேர்க்குறாங்க. அப்பொழுதெல்லாம் ஆப்பிள தோளோட சாப்பிடுறது தான் நல்லது, இப்பலாம் அப்படி சாபிட்டுறாதிங்க...

 இதெல்லாம் கொஞ்சம் அளவு நம்ம உடலுக்குள் நுழைந்தாலும் கெடுதல்தான். 

ஹோட்டல்ல சட்னி, சாம்பார் எல்லாம் பிளாஸ்டிக் பாக்கெட்ல வாங்கிட்டு போறாங்க, சூடான அந்த உணவு பொருளோட பிளாஸ்டிக்ல உள்ள கெமிக்கல்ஸ் கரைந்து உடலுக்குள் நேரடியாக கலக்கின்றன. இந்த மாதிரி கெமிகல் கலந்த உணவு பொருட்கள் சாப்பிடும் போது நம்ம உடலில் உள்ள செல்கள், ஹார்மோன்கள் பாதிப்படையும். பெண்களுக்கு மலட்டுத் தன்மை மேலும் பிறக்கும் குழந்தைகள் சில குறைபாடுகளுடன் பிறக்கும். ஏன் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகளும் உண்டு.

இன்னும் அலர்ஜி, உடல் சோர்வு, உடல் வலி, ஒபிசிட்டி, மலச்சிக்கல், வயிற்றுப்போக்கு.. ஏன் நெஞ்சுவலி வர கூட வாய்ப்பு  உள்ளதாம். இதெல்லாம் சொல்றது உங்கள பயமுறுத்த அல்ல. மாறாக விழிப்புணர்வு ஏற்படுத்த தான்.

நம்ம நாட்டில் மக்களின் வாழ்வு  மேன்மை அடைந்துள்ளது என்று பெருமைப் படுகிறோம். ஆனால், நூறு ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த மக்களை விட உடல் வலிமையிலும் நோய் எதிர்ப்பு சக்தியிலும் பின்தங்கி இருக்கிறோமே இதைப் பற்றி யோசிக்கிறோமா?

கடைசி காலத்துல நல்ல துணையோட வாழ்றது தான் பாக்கியம். ஆனா, மாத்திரை மருந்தோட தான் நடைப்பிணமா காலம் கழியுது. இதற்கெல்லாம் காரணம்..??  


       

     நம்ம பாரம்பரிய உணவு முறைகளை கை விட்டது தான்..!!


எனவே கூடுமான அளவு நம் முன்னோர் கடைப்பிடிச்சு வந்த உணவு முறைகளை அறிந்து கொண்டு அவற்றை உண்டு வந்தாலே போதும் நாம் ஆரோக்யமாக பல ஆண்டுகள் வாழலாம்.















Saturday, 4 July 2015


உங்கள் குழந்தைகளை உற்சாகம் படுத்திக்கொண்டே இருங்க ..


"அடக்கி வளர்க்கப்படும் குழந்தை கோழையாக வளரும்.
 கேலி செய்து வளர்க்கப்படும் குழந்தை திருடனாக வளரும்.
 உற்சாகப்படுத்தி வளர்க்கப்படும் குழந்தை அறிவாளியாக வளரும்."  
சொல்லுவாங்க.

உங்களுக்கு ஒரு விஷயம் தெரியுமா?

   ஒரு பெரிய விஞ்ஞானி, தன்னோட சின்ன வயசுல ஸ்கூல்ல படிக்கவே லாய்க்கு இல்லன்னு டீசி குடுத்து அனுப்சுட்டாங்க, அவங்க அம்மா தான் என் பிள்ளையாலையும் படிக்க முடியும்னு வீட்டிலிருந்தே சொல்லி குடுத்தாங்க. அவரு யாருன்னு தெரியுமா? இன்னைக்கு உலகத்தையே இருட்டுல இருந்து  வெளிச்சத்துக்கு கொண்டு வந்த நம்ம தாமஸ் ஆல்வா எடிசன் தாங்க.


ஒரு தாய் நெனச்சா தான் குழந்தைய எவ்ளோ உயரத்துக்கும் கொண்டு போக முடியும். 
  "எந்த குழந்தையும் நல்ல குழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே, அவன் நல்லவனாவதும் கெட்டவனாவதும் அன்னை வளர்ப்பினிலே !!"

அவரோட அம்மா போல உங்க குழந்தைகளோட உணர்வுகளையும் தட்டிக்கொடுத்து பாருங்க, நாளைக்கு உங்க குழந்தையும் உலகம் போற்றக்கூடிய அளவுக்கு வரலாம்.

       
ஒரு மேடையில் கல்லூரிப் பேராசிரியர் ஒருவர் உரையாற்றிக் கொண்டிருந்தார்... அவர் பேசி முடிச்சதும் வழக்கம் போல எல்லோரும் கை தட்டினாங்க. ஆனா அதில் அவருக்கு திருப்தி இல்ல. இறங்கி வந்ததும் தன்னோட நண்பர் கிட்ட, என் பேச்சு எப்படி இருந்தது என்று கேட்டார்... அதற்கு அவரும், ரொம்ப அற்புதமான பேச்சுங்க உங்களோடது, நிறைய கருத்துகளை நான் குறிப்பெடுத்து வச்சிருக்கேன்.. அப்படின்னு சொன்னார். அப்பத்தான் அந்த கல்லூரி பேராசிரியருக்கு நிம்மதி வந்துச்சு. 

    பள்ளியில் இருந்து வீட்டுக்கு வந்த குழந்தை விளையாடிகிட்டு இருந்துச்சு... குழந்தையோட அம்மா, பள்ளிக் கூடம் சேர்த்து மூணு மாசம் ஆயிடுச்சே என்ன சொல்லிக் கொடுத்திருப்பாங்கன்னு ஆசைப்பட்டு தன் குழந்தையைக் கூப்பிட்டு தங்கம் ஒன்னு, ரெண்டு தெரியுமான்னு கேட்டாங்க, குழந்தை தெரியும்ன்னு சொல்லுச்சு... சொல்லுன்னு சொன்னதும், குழந்தை ஒன்னு, ரெண்டு, மூணு, நாலு... அத்தோட நிறுத்திகிச்சு. அம்மா மறுபடியும் சொல்ல சொன்னாங்க... 

     அப்பவும் அதே மாதிரி நாலு வரைக்கும் சொல்லி நிறுத்திகிச்சு. அம்மாக்கு கோபம், என்னடா குழந்தைக்கு ஒன்னு ரெண்டு கூட சொல்லத் தெரியலைன்னு நினைச்சு கிட்டு, அடுத்த நாள் பள்ளிக் கூடத்துக்குப் போனாங்க.. அங்க ஆசிரியர் குழந்தைகளுக்கு பாடம் சொல்லிக் கொடுத்துட்டு இருந்தார். அவர் கிட்ட என்னங்க என் குழந்தை ஒன்னு, ரெண்டு கூட சொல்ல மாட்டேங்குது.. நீங்க சொல்லிக் கொடுக்களையான்னு கேட்டாங்க.. அதுக்கு அவர் சொன்னார் இல்லையே உங்க குழந்தை அழகா சொல்லுமே.. அப்படின்னு சொல்லிட்டு குழந்தைய கூப்பிட்டார்...

குழந்தை கிட்ட சொல்ல சொன்னார்... குழந்தை ஒன்னு சொல்லுச்சு, அப்போ ஆசிரியர் ம்ம்.. அப்படினார். குழந்தை ரெண்டு சொல்லுச்சு, ஆசிரியர் ம்ம் அப்படின்னார். குழந்தை மூணு சொல்லுச்சு, ஆசிரியர் ம்ம்.. அப்படின்னார்.. குழந்தை அப்படியே நூறு வரை சொல்லிடுச்சு... அப்போ அவங்க அம்மா சொன்னாங்க நான் நேத்து கேட்ட போது சொல்லலையே இப்போ மட்டும் எப்படி சொல்லுச்சு அப்படின்னு... அதுக்கு ஆசிரியர் சொன்னார், குழந்தை புதுசா கத்து கிட்டு வந்த விஷயத்தை நீங்க அங்கீகரிக்கனும்... ஒன்னு அப்படின்னு சொல்லி முடிச்சதும் நீங்க ம்ம்.. அப்படின்னு ஒரு சின்ன உற்சாகத்தை கொடுத்திருக்கணும்... 


    இயந்திரம் தான் தொடர்ச்சியா சொல்லிகிட்டே இருக்கும். மனிதர்களுக்கு தேவை உற்சாகம் மட்டுமே. அதுவும் குழந்தைகளுக்கு ரொம்பவும் முக்கியம், அப்படின்னு அம்மா செய்த தவறை சுட்டிக் காட்டினார்.

ஒரு கல்லூரிப் பேராசிரியருக்கே தன் பேச்சுக்கான உற்சாகமும் அங்கீகாரமும் தேவைப் படுகிற போது, குழந்தைகளுக்கு, அவர்களின் சிறு சிறு முயற்சிகளுக்கு நாம் உற்சாகம் அளிக்கிறோமா என்பது மிக முக்கியமானது... எனவே கற்றுக் கொள்ள வேண்டியது நாம் தான், ஏனெனில், நாமும் அதே அங்கீகாரத்திற்கு தான் காத்திருக்கிறோம்...


   ஒவ்வொரு வருஷமும் குழந்தைகள் தினைத்தை கொண்டாடுகிறோமே எப்போ குழந்தைகள கொண்டாட போகிறோம்?